என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
    X

    ஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

    • வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.கே.பேட்டை:

    பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 70). இவரது மனைவி எல்லம்மாள் (60). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்துடன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் எல்லம்மாள் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எல்லம்மாளின் மகன் முரளி (40) ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்லம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×