search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் விபத்து- தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் மரணம்
    X

    திருப்பூரில் விபத்து- தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் மரணம்

    • தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராதா. இன்று காலை ராதா அவரது குழந்தையை திருப்பூர் கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே தனியார் பள்ளி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராதா பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். சக்கரம் ஏறி இறங்கியதில் ராதா சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்.

    இதையடுத்து பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடையே அங்கு திரண்டு வந்த ராதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தப்பியோடிய டிரைவரை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைமறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ராதாவின் உறவினர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×