என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே வாலிபருக்கு வெட்டு
- பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.
- பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிக்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மோட்டார் சைக்கிளில் மெதூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்களுடன் சென்ற வாலிபரை 2 மர்ம நபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனை மணிகண்டன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் 2 பேரும் கத்தியால் மணிகண்டனை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிக்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.
Next Story






