என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் கொள்ளை- சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    தொடர் கொள்ளை- சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் கம்ப்யூட்டர், பேட்டரி, சிலிண்டர், மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்கள் தொடர்ந்து திருடு போனது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, சத்துணவு மையம், மகளிர் குழு கட்டிடம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் கம்ப்யூட்டர், பேட்டரி, சிலிண்டர், கேஸ் அடுப்பு, மின் அடுப்பு, மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்கள் தொடர்ந்து திருடு போனது.

    இது குறித்து பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ராகேஷ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கூட்டாளியான தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×