என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்தநாள் அன்றும் மது குடித்து வந்த கணவனால் இளம்பெண் தற்கொலை
    X

    பிறந்தநாள் அன்றும் மது குடித்து வந்த கணவனால் இளம்பெண் தற்கொலை

    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். இவர் முள்ளுப்பாடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இந்த தம்பதிக்கு விக்னேஷ்(8), கனிஷ் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர்.நேற்று சரவணனுக்கு பிறந்த நாள்.

    இதனால் மகஸே்வரி தனது கணவருடன் கோவிலுக்கு செல்வதற்கு முடிவு செய்தார். இதற்காக காலையிலேயே எழுந்து தனது மகன்களை புறப்பட வைத்து பள்ளிக்கு அனுப்பினார்.

    பின்னர் கணவருடன் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது சரவணன் வீட்டிற்கு குடிபோதையில் வந்தார்.

    இதனை பார்த்த மகேஸ்வரிக்கு கோபம் ஏற்பட்டது. பிறந்தநாள் அன்று கூடவா குடித்து விட்டு வருவீர்கள் என கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே கோபம் அடைந்த மகேஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவ தொடங்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயணை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×