என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிறந்து 10 நாட்களான நிலையில் இறந்த பெண் குழந்தை புதைப்பு: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
- போலீசார் விரைந்து சென்று குழந்தை புதைத்த பகுதியை தோண்டி பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து போலீசார் இறந்த பெண் குழந்தையின் தந்தை எல்லப்பாவிடமும், தாய் சத்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பெரிய சப்படி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பா (வயது35). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சத்யா (23) என்ற மனைவியும், சரண் என்ற மகனும் மான்சியா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் 3-வது முறையாக கர்ப்பமான சத்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு கடந்த 10 நாள் முன்பு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து தனது சொந்த ஊர் பெரியப்படியில் உள்ள வீட்டிற்கு தாயும், சேயும் வந்ததாகவும், பின்பு இருவரும் நலமாக உள்ளதாகவும் காமன்தொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு குழந்தை திடீரென்று இறந்ததாகவும், குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காமன்தொட்டி ஆரம்ப சுகாதார நிலை மருத்துவர் அயோத்தி என்பவருக்கு ரகசிய தகவல் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று அதிகாலை சூளகிரி தாசில்தார் சக்திவேல், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, வட்டார மருத்துவர் வெண்ணிலா வருவாய் அலுவலர் ஜெயக்குமார், கிராம அலுவலர் மற்றும் மற்றும் அதிகாரிகள் போலீசார் விரைந்து சென்று குழந்தை புதைத்த பகுதியை தோண்டி பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் இறந்த பெண் குழந்தையின் தந்தை எல்லப்பாவிடமும், தாய் சத்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை இயற்கையாக இறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதால் வேறு யாராவது சிசு கொலை செய்துள்ளனரா? என்பது தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்