search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா கடத்தி வந்த கார் விபத்துக்குள்ளானது- போலீசார் விசாரணை
    X

    குட்கா கடத்தி வந்த கார் விபத்துக்குள்ளானது- போலீசார் விசாரணை

    • விபத்தில் காரில் வந்த நபர் படுகாயம் அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்:

    சப்பாணிப்பட்டி அருகே இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாகச் சென்று மரத்தில் மீது மோதியது. இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் காரில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு நெடுஞ்சாலை துறை துறையினர் வந்து விபத்துக்குள்ளான காரை மீட்டனர். அப்பொழுது அதில் 33 குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.

    இது குறித்து போலீசார் விசாரித்தபோது, இன்று காலை சப்பாணிப்பட்டி அருகே கார் ஒன்று வேகமாக சென்று விபத்துக்குள்ளானது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அதில் 2 நபர்கள் வந்ததாகவும் ஒரு நபர் முகத்தில் பலத்த அடிபட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், காரில் வந்த மற்றொரு நபர் தப்பி ஓடி தலைமறைவு ஆகிவிட்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×