search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19 ஆயிரத்து 877 பேர் எழுதுகிறார்கள்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19 ஆயிரத்து 877 பேர் எழுதுகிறார்கள்

    • நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்களை அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • அந்தந்த பள்ளிகளின் தேவைக்கேற்ப விடைத்தாள் கட்டுகளை, பள்ளி பொறுப்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது.

    நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இதற்கான ஆயத்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் 198 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 19 ஆயிரத்து 877 பேரும், பிளஸ்-1 தேர்வை 17 ஆயிரத்து 810 பேரும் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை சம்மந்தப்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் மேல்நிலைக்கல்வி மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாள்கள் ஏற்கனவே அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்களை அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்தந்த பள்ளிகளின் தேவைக்கேற்ப விடைத்தாள் கட்டுகளை, பள்ளி பொறுப்பாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளில் டாப் ஷீட்டுடன் விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிவடைந்து தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×