என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது
    X

    ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் கைது

    • செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மர்மநபர்கள் இந்தக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் மதுபாட்டில்களை திருடியதாக திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (வயது 24), வெங்கடாபுரம் பகுதியைச்சேர்ந்த ஆகாஷ் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி செங்கல்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×