search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 லட்சத்து 31 ஆயிரத்து 100 சிக்கியது
    X

    தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 லட்சத்து 31 ஆயிரத்து 100 சிக்கியது

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • தேர்தல் பறக்கும் படையினர் சதீஷ் மறைத்து வைத்திருந்த ரூ5 லட்சத்து 40 ஆயிரத்து 800யை பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வாகன சோதனை நடத்திவருகின்றனர். மேலும் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல்உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்று பாலம் அருகே உள்ள போலீஸ் சோதனைச் சாவடி பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி வேலுசாமி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது நாமக்கல் அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு வையப்பமலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (26) என்பவர் கேரளப் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வந்தார்.

    அப்போது பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேர்தல் பறக்கும்படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் சதீஷ் கேரளாவில் முட்டைகளை விற்று கொண்டு வந்த ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 800யை லாரிக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    மேலும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சதீஷ் மறைத்து வைத்திருந்த ரூ5 லட்சத்து 40 ஆயிரத்து 800யை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் இன்று அதிகாலை பரமத்தி அருகே ஓவியம் பாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததை அடுத்து 1 லட்சத்து 9 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர் .பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் பரமத்தி வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 6 லட்சத்து 49 ஆயிரத்து 800 யை ஒப்படைத்தனர்.

    இதே போல் நாமகிரிப்பேட்டை பஸ் நிலையத்தில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.92ஆயிரத்து 800-யை பறிமுதல் செய்தனர். மேலும் புதன் சந்தை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 88 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம் ரூ. 8 லட்சத்து 31 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×