என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- வாலிபர் பலி
- திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
- விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் உமா சங்கர் (வயது 21). இவர் திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்து இருந்தார்.
பின்னர் கொரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உமாசங்கர் தனது நண்பரான நசரத் பேட்டையை சேர்ந்த விஜய் (வயது 20) என்பவருடன் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து டி.சி.யை திருப்பி கேட்டு எழுதி கொடுத்தார்.
பின்னர் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி திரும்ப சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திருத்தணி நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த விஜய் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்