search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே விபத்து- பாமக பிரமுகர் மகன் உள்பட 2பேர் பலி
    X

    விபத்தில் பலியானவர்களை படத்தில் காணலாம்.

    விழுப்புரம் அருகே விபத்து- பாமக பிரமுகர் மகன் உள்பட 2பேர் பலி

    • படுகாயமடைந்த புஷ்பராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் சாந்தகுமார் (வயது 16). அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. தொழிற்சங்க செயலாளர் தேசிங்கு. இவரது மகன் குமார் (16), பாலு மகன் என்பவரது புஷ்பராஜ் (17).

    இவர்கள் 3 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்து தீவனூரில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு, மீண்டும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தீவனூர் கூட்டேரிப்பட்டு சாலை, பெரமண்டூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பலத்த காயமடைந்த குமார் மற்றும் புஷ்பராஜ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.

    மேலும் படுகாயமடைந்த புஷ்பராஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×