search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூர் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு 2-வது நாளாக ஆய்வு
    X

    கொளத்தூர் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு 2-வது நாளாக ஆய்வு

    • பூம்புகார் நகர் பகுதியில் பெரும்பாலான கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.
    • அமைச்சர் சேகர் பாபு 2-வது நாளாக இன்றும் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்தார்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன் நகர், டீச்சர் கில்ட் காலனி, மூகாம்பிகை பிரதான சாலை, பூம்புகார் நகர், ஜி.கே.எம். காலனி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது.

    மழைநீர் வடிகால் பணியால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, கால்வாய் பணியால் குழாய் உடைந்து குடிநீரில் எந்த மாசும் ஏற்படவில்லை. வி.வி.நகர் 1-வது தெரு முதல் 5-வது தெருவரை உள்ள பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி நடைபெறவில்லை. எனவே இப்பகுதியில் மாசு ஏதும் இல்லை. மூகாம்பிகை கோவில் பிரதான சாலையில் மழை நீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இதல் 80 மீட்டர் கால்வாய் பணி மீதம் உள்ள நிலையில் சேதம் அடைந்த 60 மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் பிரதான குழாய் மற்றும் 2 எந்திர நுழைவாயில் புதுப்பிக்கப்பட உள்ளது. அங்கு குடிநீர் குழாய்கள் ஏதும் சேதம் ஏற்படவில்லை. குடிநீரும் மாசு அடையவில்லை.

    ஜி.கே.எம்.காலனியில் கால்வாய் பணி நடக்கிறது. அங்கு எந்த புகாரும் இல்லை. பூம்புகார் நகர் பகுதியில் பெரும்பாலான கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. அங்கும் குடிநீர் மாசு பற்றி எந்த புகாரும் பெறப்படவில்லை. ஜெயராம் நகர் பகுதியில் கால்வாய் பணி ஏதும் நடைபெறவில்லை. இந்த அனைத்து இடங்களிலும் குடிநீர் வினியோகம் குழாய் மூலம் சீராக வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்றார்.

    இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு 2-வது நாளாக இன்றும் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்தார். அவர், அகரம் ரங்கசாயி நாயுடு தெருவில் உள்ள அரசு பள்ளி, சோமையா ராஜா தெருவில் உள்ள சுகாதார மருத்துவமனை மற்றும் அரசு பள்ளி, சீனிவாசன் நகரில் உள்ள சுகாதார மருத்துவமனை மற்றும் மாநகராட்சி பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது திரு.வி.க. நகர் மண்டல தலைவர் சரிதா மகேஷ், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×