search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவாக உள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
    X

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவாக உள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    • திருச்சியில் நடைபெற உள்ள கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
    • காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது.

    திருச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 27-ந் தேதி கேர் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வருகிற 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் கேர் கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த வேளாண் சங்கமம் விழாவை வருகிற 27-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிற்சிகள் இங்கு வழங்கப்பட இருக்கிறது. வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையின் சார்பாக பயிர் சம்பந்தமாக கருத்துகளை வழங்க இருக்கிறார்கள்.

    வேளாண் வணிகம் சார்பாக கடந்த 10-ந்தேதி சென்னையில் மாபெரும் கண்காட்சி தொடங்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

    திருச்சியில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது. மற்ற மாநிலங்களை விட தக்காளி விலை தமிழகத்தில் பரவாயில்லை. விலையேற்றத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் தமிழக அரசு உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவு துறை மூலமாகவும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. சில காலங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்து விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×