search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைக்கிறார்
    X

    சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைக்கிறார்

    • ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பயணிகள் நிழற்குடைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகிறார்.
    • விழாவில் தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி., ஜே. எம். எச். அசன் மவுலானா எம். எல். ஏ., மேயர் பிரியா, துணை மேயர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி 13-வது மண்டலம் 177 - வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் உள்ள பெத்தேல் அவென்யூவில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் தளத்தை திறந்து வைக்கிறார்.

    மேலும் 177-வது வார்டு கவுன்சிலர் பெ. மணிமாறனின் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பயணிகள் நிழற்குடைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் தமிழச்சி தங்க பாண்டியன் எம். பி., ஜே. எம். எச். அசன் மவுலானா எம். எல். ஏ., மேயர் பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், 13-வது மண்டல குழு தலைவர் இரா. துரைராஜ், 177-வது வட்ட தி.மு.க. பொருளாளர் வழக்கறிஞர் சி.வி. இளங்கோவன், வட்ட செயலாளர்கள் மதிவாணன், சக்திவேல் மற்றும் மீசை கே.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×