search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் கடத்திய ரூ.5 லட்சம்  மதிப்புள்ள குட்கா பறிமுதல்- வியாபாரி கைது
    X

    காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்- வியாபாரி கைது

    • காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர்.
    • வியாபாரியிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு காரில் மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பெங்களூரில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    Next Story
    ×