என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
- சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
- மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி நேற்று நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமையில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:-
நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், சதானந்தபுரம், மப்பேடு பகுதிகளில் உள்ள வீடுகளில் மாடுகளை வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை வீடுகளிலே கட்டி வளர்க்க வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்