என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் சுற்றுலா சென்ற மதுரை தனியார் நிறுவன உரிமையாளரிடம் நகை, பணம் திருட்டு- டிரைவர் உள்பட 4 பேர் கைது
- மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
- தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாறை:
மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 28) தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது கார் டிரைவராக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்பவர் பணியாற்றி வந்தார்.
தர்மராஜ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி காரில் கொடைக்கானல் சென்றார். காரை டிரைவர் மனோஜ் ஓட்டியுள்ளார். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார். வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் ஊத்து அருகே வந்த போது மணிகண்டன் தனது நண்பர்களான தேனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ரமேஷ், சிவா, ஆண்டிபட்டியைச் சேர்ந்த மதன் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் சிறிது நேரம் பேசினர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். அப்போது காரில் இருந்த பணம் ரூ.2 லட்சம், 1.5 பவுன் நகை ஆகியவை மாயமாகி இருந்ததை கண்டு தர்மராஜ் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் டிரைவர் மனோஜ் தர்மராஜிடம் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் இருப்பது தெரிய வந்ததால் தனது நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து அதனை திருட திட்டம் போட்டார். அதன்படி அவர்களை வரவழைத்து பேச்சு கொடுத்து சிறிது நேரத்தில் பணத்தை திருடியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து டிரைவர் மனோஜ், மணிகண்டன், சண்முகசுந்தரம், மதன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர். தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்