search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 24 மணி நேரமும் இயங்க அனுமதி
    X

    மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 24 மணி நேரமும் இயங்க அனுமதி

    • தற்போது இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
    • இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது.

    மதுரை :

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.

    வெளிநாட்டு விமான சேவை நடைபெறும் நாட்களில் கூடுதலாக 2 மணி நேரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது. தென் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர்.

    இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் 24 மணி நேர சேவை நடைபெற அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×