search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாசில்தாரர்களுக்கு விதித்த சிறை தண்டனைக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
    X

    தாசில்தாரர்களுக்கு விதித்த சிறை தண்டனைக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

    • ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும் படி, அம்பத்தூர் வட்டாட்சியருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட் உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்று அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    இதனை எதிர்த்து மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×