search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் விபத்து: லாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
    X

    கோவில்பட்டியில் விபத்து: லாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

    • தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான தென்காசி மாவட்டம் குறிஞ்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்தை என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 53). இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலையில் கிழக்கு காவல் நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான தென்காசி மாவட்டம் குறிஞ்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்தை (33) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×