search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவரிடம் லஞ்சம் கேட்ட விவகாரம்: கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்
    X

    டிரைவரிடம் லஞ்சம் கேட்ட விவகாரம்: கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்

    • பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.
    • நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிவர் குமரிமன்னன். இவர் சரிவர தனது பணிகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வாடகை பாக்கி கேட்டு ஜே.சி.பி. டிரைவர் விஜயராகவன் என்பவர் நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து போராட்டம் நடத்தினார். அப்போது அவர் வாடகை தொகை தர ஆணையர் குமரிமன்னன் லஞ்சம் கேட்பதாக கூறினார். இதையடுத்து அவரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென தன் உடல் மீது டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தனது பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.

    அதனை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×