search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுங்கையூரில் துடைப்பம் வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
    X

    கொடுங்கையூரில் துடைப்பம் வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

    • ஷான் முகமது பணம் கொள்ளை போய் இருப்பதாக கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுங்கையூர், எம்.ஜி.ஆர். நகர், அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஷான் முகமது. துடைப்பம் வியாபாரி. இவர் வீட்டில் உள்ள பீரோவில் ரூ.1 லட்சம் ரொக்கம் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷான் முகமது பணம் கொள்ளை போய் இருப்பதாக கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார்.

    ஆனால் பீரோ, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படாமல் உள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×