search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரப்பாக்கத்தில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டாரா?
    X

    காரப்பாக்கத்தில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டாரா?

    • என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள்.
    • வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    காரப்பாக்கத்தில் வசித்து வந்தவர் சுகந்தா ஆச்சார்யா (வயது34). கம்ப்யூட்டர் என்ஜினீயர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மார்பு பகுதியில் ஸ்குருடிரைவர் குத்திய நிலையில் இருந்தது.

    இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரை யரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து சுகந்தா ஆச்சார்யாவின் நண்பர்கள் யார்? யார்? அவரது வீட்டுக்கு கடைசியாக வந்தவர்கள் யார்? வேலை பார்த்த இடத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×