என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம் திருட்டு
- அரிசி வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
- காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கணிகண்டீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 39). இவர் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை செவிலிமேடு பி. எஸ்.கே நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அரிசி வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இளங்கோவன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.






