search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    • மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர், கட்டவாக்கம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம் (வயது 55). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கும்போல கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து ரொக்கப்பணம், தங்க நகைகளை வாரி சுருட்டி கொண்டு தப்பி சென்றனர். மாலதி பணி முடித்து மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து சதாசிவம் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை, பணம் திருடு போனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×