search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனகம்மாசத்திரம் அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
    X

    கனகம்மாசத்திரம் அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

    • பூங்கோவன் அவரது மனைவி ரோசி, மகள் ஹேமலதா உள்ளிட்டோர் மூதாட்டி குமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • மூதாட்டி குமாரி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கனகம்மாசத்திரம்:

    கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரியை சேர்ந்தவர் குமாரி (வயது 60). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பூங்கோவன் குடும்பத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், பூங்கோவன் அவரது மனைவி ரோசி, மகள் ஹேமலதா உள்ளிட்டோர் மூதாட்டி குமாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மூதாட்டி குமாரி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டியை தாக்கிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×