search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
    X

    பூட்டிய வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

    • நகை, ரூ.2,500 மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன்.

    கடந்த வாரம் 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்கு சென்றார்.

    தொழுகை முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போது, 10 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சுதாகர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீன் முகமது பாதுஷா (வயது 20) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்த வாலிபரிடம் இருந்த அனை த்து பொருள்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×