என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு- வாலிபர் கைது
    X

    கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு- வாலிபர் கைது

    • கடம்பத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாலமன் அருண்ராஜ் என்பவர் ஆனந்தராஜை மிரட்டி பணம் தருமாறு கேட்டுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடம்பத்தூர்:

    கடம்பத்தூர் பஜார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 53). இவர் கடம்பத்தூர் பஜாரில் கயலான் கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வழக்கம் போல் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த கடம்பத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாலமன் அருண்ராஜ் (26) என்பவர் ஆனந்தராஜை மிரட்டி பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சாலமன் அருண்ராஜ், கடைகாரரை கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

    இது குறித்து அவர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சாலமன் அருண்ராஜை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.500 யும், ஒரு கத்தியையும் பறிமுதல் செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×