search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு தீவிர சிகிச்சை
    X

    உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு தீவிர சிகிச்சை

    • நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.
    • கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடலை கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம் அருகில் முருகன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் எழுந்து நடக்க முடியாத நிலையில் பெண் காட்டுயானை ஒன்று படுத்திருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின் பேரில் சிறுமுகை வனரக அலுவலர் மனோஜ், வன கால்நடை மருத்துவர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பெண் காட்டு யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அளித்து வருகின்றனர்.

    யானையின் உடல்நிலை மெலிந்த நிலையில் உள்ளதால் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.

    இன்றும் உடல் நலம் பாதித்த காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×