என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறக்கும் படை சோதனையில் ரூ.6.7 லட்சம் பணத்துடன் சிக்கிய வருமானவரித் துறையினர்
- விமான நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் என தெரிவித்துள்ளனர்.
- போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டரசன் சாலை-மூர்ஸ் சாலை சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.6.7 லட்சம் பணம் இருந்ததை பார்த்தனர். காரில் இருந்த வருமான வரித்துறை பணியாளர்கள் நாராயணசாமி, அட்சய் குமார் ஆகியோர் விமான நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வருமான வரித் துறை ஆய்வாளர் ஸ்ரீராமுலு இது தொடர்பாக முறைப்படி விளக்க கடிதம் கொடுத்து, பறிமுதல் செய்த 6.7 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகளிடமிருந்து பெற்றுச்சென்றார்.
போலீசார் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி டெல்லிக்கு பணத்தை எடுத்துச் செல்ல முயன்ற தனியார் நிறுவன பணியாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் என தெரியவந்தது.






