என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை: குற்றப்பத்திரிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
- மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார்.
- முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றப்படுகையில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் லூர்து பிரான்சிஸ்சுக்கு போதிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டனர்.
இந்த வழக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சத்தை பெற்றுக் கொண்டு மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.
இந்த சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை வெளிவராது. ஆகவே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதற்காக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அரசின் அறிக்கையின் படி தென் மண்டல காவல்துறை தலைவர் கண்காணிப்பின் கீழ், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 4 வாரத்தில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் 3 வாரத்தில் மாவட்ட நீதிபதிக்கு வழக்கை மாற்ற வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்