search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமந்தபுரம் அருகே மது விற்றவர் கைது
    X

    அனுமந்தபுரம் அருகே மது விற்றவர் கைது

    • திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மதுபான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×