என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே கொள்ளையன் கைது
    X

    கூடுவாஞ்சேரி அருகே கொள்ளையன் கைது

    • பல்வேறு இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
    • சுமனை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் காரனை புதுச்சேரி கூட்டு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கேளம்பாக்கம், ஜோதி நகரை சேர்ந்த சுமன்(45) என்பதும், கூடுவாஞ்சேரி, காயரம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சுமனை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×