search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கம்
    X

    சேலத்தில் 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கம்

    • வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
    • பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதையொட்டி சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 1060 அரசு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.


    2-வது நாளாக இன்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்கி வருகிறார்கள்.

    அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு பதில் மாற்று டிரைவர்கள், தனியார் பஸ், லாரி டிரைவர்களை நியமித்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பாதிப்பின்றி பயணம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×