search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த வாலிபரை இழுத்து சென்ற ராட்சத அலை
    X

    ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட மகேஷா

    கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த வாலிபரை இழுத்து சென்ற ராட்சத அலை

    • மகேஷா தனது நண்பர்களுடன் கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்து சென்றது.
    • இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    வானூர்:

    உத்தரபிரதேசம் மாநிலம் ஆவாஜ் பிகார் காலனியை சேர்ந்தவர் துளசிதாஸ். அவரது மகன் மகேஷா. பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்தார். அதன்படி நண்பர்கள் 7 பேருடன் புதுவைக்கு வந்தார்.

    இவர்கள் கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் மகேஷா தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள கடலில் குளித்தார். அப்போது எழும்பி வந்த ராட்சத அலை மகேஷாவை இழுத்து சென்றது.

    அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×