search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே காப்புக்காட்டில் பயங்கர தீ விபத்து
    X

    விருத்தாசலம் அருகே காப்புக்காட்டில் பயங்கர தீ விபத்து

    • விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் காப்புக்காடு உள்ளது. இதில் கார்மாங்குடி காப்புக்காட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.

    இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து இரவு 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைந்திருந்த மரங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போன்று, விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தபகுதியில் புகை மண்டலமாக மாறியதுடன், அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

    Next Story
    ×