search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அயப்பாக்கத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: என்ஜினீயர் கைது
    X

    அயப்பாக்கத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: என்ஜினீயர் கைது

    • வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திரும்பி வந்து அண்ணன் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
    • அப்போது வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    திருநின்றவூர்:

    ஆவடி அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியின் வீட்டிற்கு விளையாட சென்றார். அப்போது வீட்டில் தோழியின் உறவினரான கோவிந்தராஜ் (38) என்பவர் மட்டும் இருந்தார். அவர் சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பேச்சு கொடுத்தார். திடீரென அவர் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். உடனே கோவிந்த ராஜ், சிறுமியிடம் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்து வெளியில் அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருமுல்லைவாயில் போலீசில் புகார் செய்தனர். போலீசார் என்ஜினீயரான கோவிந்த ராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திரும்பி வந்து அண்ணன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×