search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டையார்பேட்டையில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
    X

    தண்டையார்பேட்டையில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

    • ஆதிமூலம் குளித்துவிட்டு மின்விசிறியை போடுவதற்காக சுவிட்சை போட்ட பொழுது மின்சாரம் தாக்கியது.
    • காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது58) கொத்தனார். இவர் தண்டையார்பேட்டை விநாயகபுரம் 9-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் 2 ஆண்டுகளாக மனைவி, மகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஆதிமூலம் குளித்துவிட்டு மின்விசிறியை போடுவதற்காக சுவிட்சை போட்ட பொழுது மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார். வீட்டில் இருந்த அவரது மகள் அவரை உடனடியாக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆதிமூலம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது பற்றி காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×