search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரைவில் முட்டை விலை உயரும்- குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என என்.இ.சி.சி. அறிவுறுத்தல்
    X

    விரைவில் முட்டை விலை உயரும்- குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என என்.இ.சி.சி. அறிவுறுத்தல்

    • வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது.
    • நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 35 என்ற அளவிற்கு மிகாமல் முட்டைகளை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 5 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கிறது. இதனால் முட்டை கோழி பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என தேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 35 என்ற அளவிற்கு மிகாமல் முட்டைகளை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. எவரேனும் 35 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள், அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×