என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 1 ரூபாய் 5 காசுகள் சரிவு- பண்ணையாளர்கள் கவலை
- முட்டை கொள்முதல் விலை அண்டை மாநிலங்களில் உள்ள விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
- முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு தினசரி அறிவிக்கிறது.
நாமக்கல்:
தமிழகத்தில், நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1,000 முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5.50 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டை, தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், லாரிகள் மூலம், தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 நாட்கள் முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. என்.இ.சி.சி நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.
இந்த முட்டை கொள்முதல் விலை அண்டை மாநிலங்களில் உள்ள விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பேக்) தினசரி அறிவிக்கிறது.
நாமக்கல் மண்டலத்தில், கடந்த 2022 டிசம்பர் 24-ந்தேதி, ரூ.5.50 இருந்த முட்டை கொள்முதல் விலை, கடந்த ஜனவரி 9-ந் தேதி ரூ.5.65 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த உயர்ந்தபட்ச விலை, 20 நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 21-ந்தேதி 20 காசு, 25-ந்தேதி 30 காசு, 27-ந்தேதி 25 காசு என 6 நாட்களில் ஒரு முட்டைக்கு என்.இ.சி.சி விலை 75 காசு சரிந்தது.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 30 காசு குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.05 சரிவடைந்துள்ளது.
இந்த நிலையில் நெஸ்பேக் அமைப்பு ஒரு முட்டைக்கு 30 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.30 மட்டுமே கிடைக்கும். ஒரு வாரத்தில், முட்டை கொள்முதல் விலை ரூ.1.05 சரிவடைந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைத் தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் கடும் கவலையில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்