search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மனுதாக்கல்
    X

    காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மனுதாக்கல்

    • தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
    • கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 10-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் விஜயகுமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதேபோல் திம்மாவரம் ஊராட்சியில் 4-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் எல்லம்மாள் மரணம் அடைந்ததால் அங்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 9-ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டு பெட்டிகள் சரி பார்க்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.

    நேற்று காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வி.இளங்கோவன் தேர்தல் அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான சாய்கிருஷ்ணனிடம் மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றியகுழு தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்தானம், அருள்தேவி, கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×