என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் விற்பனை செய்வதில் தகராறு- வாலிபர் மீது தாக்குதல்
- பட்டரவாக்கம் யாதவா தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (29).
- கட்டையால் முனியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பட்டரவாக்கம் யாதவா தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (29). இவர் தனது மினி வேனில் தண்ணீர் தொட்டி அமைத்து வீதி வீதியாக சென்று தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் ஜெகநாதன் நகரில் தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த 2 பேர் எங்களுக்கு போட்டியாக இந்த ஏரியாவில் எப்படி தண்ணீர் வியாபாரம் செய்யலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் கட்டையால் முனியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ராஜமங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர்.
Next Story






