என் மலர்
உள்ளூர் செய்திகள்

கே.கே.நகரில் இன்ஸ்பெக்டரிடம் ரகளை- வாலிபர் கைது
- ஆத்திரம் அடைந்த கோகுல் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர்.
போரூர்:
சென்னை, கே.கே. நகர் ராஜமன்னார் சாலை அருகே நேற்று நள்ளிரவு வாலிபர்கள் சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக கே.கே. நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா, மற்றும் போலீஸ்காரர் விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். கோகுல் மீது ஏற்கனவே கே.கே நகர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






