என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி மாதம் நாளை பிறப்பதால் திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
- திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்வார்கள்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வேலூர்:
புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கம்.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் இதையொட்டி, திருவண்ணாமாலை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெருமாளுக்கு விரதமிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருப்பதியை நோக்கி பாத யாத்திரை தொடங்கினர்.
வேலூருக்கு வந்த அவர்கள், கோட்டை பூங்காவில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். தொடர்ந்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க போகிறோம் என்று கூறி பக்திப்பரவசத்துடன் "கோவிந்தா.. கோவிந்தா... என பெருமாளின் நாமத்தை உச்சரித்தபடியே ஆன்மிக பாதயாத்திரையை தொடர்ந்தனர்.






