search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
    X

    சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

    • கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.
    • சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே நாய்களை கொன்று சாப்பிட்டு சுற்றித்திரியும் சிறுத்தை, ஊருக்குள் புகுந்து ஆட்டை கவ்வியதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் மதனகிரி பகுதியில், முனீஸ்வரசாமி கோவிலையொட்டி, சனத்குமார நதி ஓடுகிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தற்போது போதிய நீரோட்டமின்றி, வறண்டு புதர்மண்டி கிடக்கிறது.

    இந்நிலையில், கோவில் பின்புறம் சனத்குமார நதியின் கரையில், கடந்த 4 மாதங்களாக சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் அருகில் உள்ள தெரு நாய்களை அடிக்கடி கவ்விக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால், கிராம மக்கள் பீதிக்குள்ளான நிலையில், தேன்கனிகோட்டை வனத்துறையினர், கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பண்ணையில் செயல்படும் தனியார் ஓட்டலில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக வரும் நாய்களை கடித்து தின்றவாறு, அப்பகுதியில் சிறுத்தை முகாமிட்டதை கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.

    இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தை தப்பியதால், சலிப்படைந்த வனத்துறையினர், கடந்த சில நாட்களாக தேடும் பணியை கைவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை, அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த அடவிசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி என்பவரின் ஆட்டை சிறுத்தை கவ்வியுள்ளது. அதனைக் கண்டு அவ்வழியாக சென்ற பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனால், ஆட்டை விட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு துரைசாமி தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்குள் பாறை இடுக்குகளில் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது. இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து தின்றுள்ளதாவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, நவீன கூண்டு அமைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×