search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் விதிமுறைகளால் களையிழந்த மாட்டுச்சந்தை
    X

    தேர்தல் விதிமுறைகளால் களையிழந்த மாட்டுச்சந்தை

    • தேர் திருவிழாவில் பிரம்மாண்டமாக மாட்டுச்சந்தை நடைபெறும்.
    • மாட்டு சந்தைக்கு நாட்டு மாடுகள் விற்பனைக்காக வந்தன.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மேல் காளியம்மன் மற்றும் கீழ்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி சித்திரை மாதம் முதல் வாரம் வரை தேர்த்திருவிழா நடப்பது வழக்கம்.

    அதேபோல், இந்த ஆண்டு தேர் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் பிரம்மாண்டமாக மாட்டுச்சந்தை நடைபெறும்.

    அந்த சந்தையில் தருமபுரி மற்றும் அந்தியூர், காங்கேயம்,மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. மேலும் கொண்டு வரப்பட்ட கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் மாட்டு சந்தைக்கு நாட்டு மாடுகள் விற்பனைக்காக வந்தன.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் விவசாயிகள் கால்நடைகளை விற்பனை செய்து எடுத்துச் செல்லும் பணத்திற்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் கொண்டு வரப்படும் பணங்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாடுகளை வாங்கவும், விற்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அதியமான்கோட்டையில் கூடியுள்ள மாட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது.

    Next Story
    ×