என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கங்கைகொண்டான் சிப்காட்டில் லிப்டில் சிக்கி காண்ட்ராக்டர் பலி
    X

    கங்கைகொண்டான் சிப்காட்டில் லிப்டில் சிக்கி காண்ட்ராக்டர் பலி

    • போர்ட் லிப்ட் உதவியுடன் உயரத்தில் நின்றபடி அரியகுமார் கண்ணாடி மாட்டிக்கொண்டிருந்தார்.
    • லிப்ட் ஆபரேட்டரான மதுரை சூரப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    மதுரை மாவட்டம் பறவை பகுதியை சேர்ந்தவர் அரியகுமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனங்களில் கண்ணாடி மாட்டும் தொழிலை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.

    கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிய பிளான்ட் அமைக்கும் பணிக்காக இவர் கண்ணாடி மாட்டுவதற்கு சென்று இருந்தார்.

    இன்று அதிகாலை போர்ட் லிப்ட் உதவியுடன் உயரத்தில் நின்றபடி அவர் கண்ணாடி மாட்டிக்கொண்டிருந்தார். அப்போது லிப்ட் ஆபரேட்டரை உபகரணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து லிப்ட்டை ஆப் செய்யாமல் அவர் இறங்கி சென்று விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் மேல் நோக்கி உயர்ந்துள்ளது. இதில் அதன் மேல் பகுதியில் அமர்ந்திருந்த அரிய குமார் காங்கிரிட் மேற்கூரையில் நடுவில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று அரியகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக லிப்ட் ஆபரேட்டரான மதுரை சூரப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (26) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×