search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களை கேலி செய்ததை தட்டிகேட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
    X

    பெண்களை கேலி செய்ததை தட்டிகேட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

    • பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    • அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வின்(18). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பேரம்பாக்கம் பகுதியில் இளம் பெண்களை சிலர் கேலி-கிண்டல் செய்தனர். இதனை அஸ்வின் தட்டி கேட்டார்.

    இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று மாலை கல்லூரி முடிந்து கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்த அஸ்வினை 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×