search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு- 276 பயணிகள் தவிப்பு
    X

    சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு- 276 பயணிகள் தவிப்பு

    • பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை லண்டன் செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் 276 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு விமானம் புறப்படும் என்று முதலில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

    பின்னர் கோளாறை சரிசெய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் நாளை காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தபடி உள்ளனர்.

    Next Story
    ×